Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பள்ளி மாணவி கற்பழித்து கொலை: முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (11:48 IST)
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இலக்கியம் பட்டியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்வராஜ். இவரது 2 ஆவது மகள் ஸ்ரீஜா. 17 வயதுடைய  ஸ்ரீஜா பெரிய மணலி அடுத்த கோட்டைபாளையத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். 
 
ஸ்ரீஜா தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வந்தார். இதே போல் நேற்றும் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் பள்ளிக்குச் சென்றுசேர வில்லை.
 
தேர்வு நேரத்தில் மாணவி வராததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து ஸ்ரீஜா ஏன் வரவில்லை என்று கேட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, ஸ்ரீஜாவின் தந்தை செல்வராஜ், கோட்டைபாளையத்திற்குச் சென்று விசாரித்தார். அப்போது ஸ்ரீஜா பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது மகளைத் தேடிச்சென்றார்.
 
இந்நிலையில், பள்ளிக்குச் செல்லும் வழியிலுள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்திருந்த குடிசை கொட்டகைக்கு முன்பாக மாணவியின் சைக்கிள் கிடந்தது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை அங்கு சென்று பார்த்தார்.
 
அந்த குடிசை கொட்டகையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதை பிரித்து பார்த்த போது மாணவி ஸ்ரீஜா அலங்கோலமான நிலையில் பிணமாகக் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். 
 
இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல்துறைய சூப்பிரண்டு செந்தில்குமார்,  திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுமன், தாசில்தார் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
 
காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை  நடத்தினர். விசாரணையில் மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
மேலும் இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாணவி ஸ்ரீஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதைத் தொடர்நது, மாணவி ஸ்ரீஜாவை திலீபன் என்ற 20 வயது இளைஞர் கொலை செய்திருக்கலாம் என்று கருதிய மாணவியின் தந்தை அந்த நபரை ஊர்பொதுமக்கள் உதவியுடன் பிடித்து எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
 
காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் துஞ்சம் பாளையத்தைச் சேர்ந்த அவரது நண்பர் 20 வயதுடைய சந்தோஷ், மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவர் பூளாச்சிப்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய மணிகண்டன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
 
அப்போது இவர்கள் 3 பேரும் சேர்ந்து மாணவி ஸ்ரீஜாவை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டிய, அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இது குறித்து திலீபன் காவல்துயையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 
நான் ரிக் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறேன். நானும், மாணவி ஸ்ரீஜாவும்...
மேலும் அடுத்தப்பக்கம்...
webdunia
உறவினர்கள். நாங்கள் 2 பேரும் காதலித்து வந்தோம். இந்நிலையில் திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதை குறைத்து கொண்டார். 
 
இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லாமல் என்னுடன் பழகுவதை புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது.
நன்றாக பேசி வந்த காதலி திடீரென என்னை விலகி செல்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது.
 
இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலை கைவிடுமாறு கூறினேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது.
இதுப்பற்றி நான் துஞ்சம்பாளையம் பகுதியை சேர்ந்த எனது நண்பர் சந்தோஷ் என்பவரிடம் கூறினேன். அவன் எனக்கு ஆறுதல் கூறிவந்தான்.
 
இதற்கிடையே நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்துள்ள கொட்டகையில் தனிமையில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நானும் சந்தோசும் விரைந்து சென்றோம்.
 
அப்போது அவர்கள் 2 பேரும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. இதை சகித்துக் கொள்ள முடியாத நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது எங்களுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டது.
 
தொடர்ந்து மாணவி ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோசும் கற்பழித்தோம். பின்னர் அவள் மயக்கம் அடைந்தாள். இனியும் விட்டு வைத்தால், மீண்டும் மணிகண்டனுடன்தான் இருப்பாள் என்று கருதிய நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன்.
 
மயக்கத்தில் இருந்த ஸ்ரீஜாவின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தோம். பின்னர் சாக்கு மூட்டையில் அவளது பிணத்தை திணித்து விட்டு அங்கிருந்து வந்து விட்டோம். எனக்கும், ஸ்ரீஜாவுக்கும் பிரச்சினை இருப்பதை தெரிந்து கொண்ட அவளது தந்தை நான்தான் கொலை செய்தேன் என்று முடிவு செய்து என்னை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறினார்.
 
இதைத் தொடர்ந்து மாணவர் மணிகண்டனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாங்கள் 2 பேரும் காதலித்து வந்தோம் என்றும், தனிமையில் பேசி கொண்டு இருந்த போது, திலீபன் மற்றும் அவரது  நண்பர் ஆகியோர் எங்களை தாக்கினர் என்றார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil