Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆம் வகுப்பு மாணவி கழுத்தை நெரித்து கொலை: திருவள்ளூரில் பரபரப்பு

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (12:14 IST)
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவரின் மகள் ரோஸ்மேரி.
 
இவர் எளாவூர் பகுதியில் உள்ள தலையாரிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
ரோஸ்மேரியின் தாய் அம்பிகா பணி முடிந்து விட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார்.
 
இதனால் பதற்றம் அடைந்த அவ்ர், உள்ளே சென்று பார்த்த போது , அவரது மகள் ரோஸ் மேரி கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த கொலை சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

Show comments