Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 ஆம் வகுப்பு மாணவி கழுத்தை நெரித்து கொலை: திருவள்ளூரில் பரபரப்பு

12 ஆம் வகுப்பு மாணவி கழுத்தை நெரித்து கொலை: திருவள்ளூரில் பரபரப்பு
, புதன், 10 பிப்ரவரி 2016 (12:14 IST)
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவரின் மகள் ரோஸ்மேரி.
 
இவர் எளாவூர் பகுதியில் உள்ள தலையாரிபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 
ரோஸ்மேரியின் தாய் அம்பிகா பணி முடிந்து விட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார்.
 
இதனால் பதற்றம் அடைந்த அவ்ர், உள்ளே சென்று பார்த்த போது , அவரது மகள் ரோஸ் மேரி கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
இந்த கொலை சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த கொலை சம்பவத்திற்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil