Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருக்குற பாடத்தை முதல்ல சரியா நடத்துங்க! – ஆசிரியர்களை ஆஃப் செய்த செங்கோட்டையன்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (09:22 IST)
அரசு பள்ளிகளில் இந்தியை விருப்பப்பாடமாக சேர்க்க ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகள் நடத்துவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர் இடையேயும் அதிர்ப்பு எழுந்தது. பலரின் கோரிக்கைகளை பரிசீலித்த அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டும் இருந்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவை தமிழக அரசு எட்டியுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களிடன் ஆசிரியர்கள் வசூலித்த தேர்வு கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை” என்று கூறியுள்ளார்.

இந்தியை அரசு பள்ளிகளில் விருப்பப்பாடமாக சேர்ப்பது குறித்த ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு பதில் அளித்த அவர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை சரியாக நடத்தினால் போதும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments