Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி நிர்வாகி கைது

பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி நிர்வாகி கைது
, புதன், 24 ஜூன் 2015 (01:52 IST)
மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் பள்ளி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
 
விழுப்புரம் மாவட்டத்தில், கோட்டகுப்பத்தில் குயின் மேரி என்ற தனியார் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் இனியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சிறுமியை, கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு என்று கூறி தனது  அறைக்கு அழைத்து சென்று பள்ளி தாளாளர் சிவக்குமார் (50) பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், உடல் நிலையில் மாற்றம் கண்ட இனியா, பள்ளிக்கு செல்ல மறுத்து, அங்கு நடத்தை கூறி அழுதுள்ளாள். உடனே, இனியாவை அவளது பெற்றோர்கள் ஒரு மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, சிறுமி இனியாவின் தந்தை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பள்ளி தாளாளர் சிவக்குமாரை கைது செய்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil