Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (07:47 IST)
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
 
சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற பகுதியில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பள்ளியின் தாளாளர் வினோத் மீது மாணவ மாணவிகள் குற்றம்சாட்டினார். 
 
இதனை அடுத்து பள்ளி தாளாளரை கைது செய்ய வேண்டும் என மாணவ மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வினோத் திடீரென தலைமறைவானதால் அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு கவுன்சிலிங் தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

2வது நாளாக தங்கம் விலை உயர்வு.. மீண்டும் ரூ.54,000ஐ நெருங்கிய சவரன்..!

16 வயது சிறுமியுடன் நடந்து சென்ற இளைஞரை வழிமறித்த கும்பல்.. வீடுபுகுந்து வெட்டியதால் அதிர்ச்சி..!

பாலியல் புகாரில் சிக்கிய பூசாரி கைது.. கொடைக்கானலில் தலைமறைவாக இருந்ததாக தகவல்..!

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

ஒரே ஹோட்டலில் சாப்பிட்ட 178 பேர் உடல்நலம் பாதிப்பு.. பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்