Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் விடிய விடிய மழை.. 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு..!

Siva
புதன், 13 நவம்பர் 2024 (07:03 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றியுள்ளது. அடுத்து, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதைக் கண்டு வருகிறோம். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு சென்னை உள்பட சில மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மேலும் சில மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், பள்ளி, கல்லூரி குறித்த அறிவிப்புகள் சில மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பொறுத்தவரை இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீர்காழியில் 14 சென்டிமீட்டர் மழை பெய்ததாகவும், இதன் காரணமாகத்தான் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments