Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து: சவுக்கு சங்கர் திடீர் முழக்கத்தால் பரபரப்பு..!

Siva
திங்கள், 13 மே 2024 (10:58 IST)
மருத்துவ பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டபோது திடீரென கோவை சிறையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சவுக்கு சங்கர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கோவை சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு வலது கையில்  மீண்டும் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் வலது கையில் மாவு கட்டு போட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் கோவை மருத்துவமனைக்கு வந்த போது அவர்  கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து என்று முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தகுந்த பாதுகாப்போடு போலீசார் அழைத்து சென்றனர்

பெண் காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய பேசிய வழக்கு, கஞ்சா வழக்கு, பெண் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகார்,  பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகார் உள்பட பல வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பாய்ந்து உள்ளது என்பதும் சமீபத்தில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments