சவுக்கு சங்கருக்கு மே 17ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. சிறையிலடைக்க உத்தரவு..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (11:47 IST)
பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மே 17ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகம் ஒன்றில் பேசியதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று தேனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்

அதன் பின்னர் தேனியில் இருந்து அவர் கோவை கொண்டு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் குறித்து அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் கோவை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments