Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவலர் குறித்து சர்ச்சை கருத்து: சவுக்கு சங்கர் அதிரடி கைது..!

Mahendran
சனி, 4 மே 2024 (07:58 IST)
பெண் காவலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அரசியல் விமர்சகர் மற்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் தேனிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சவுக்கு சங்கர் மீடியாவில் இருப்பவர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுக்கு சங்கர் தேனியில் இருந்து கோவை அழைத்து சென்றதும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments