Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரியில் பௌர்ணமி வழிபாடு; பக்தர்களுக்கு அனுமதி!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:24 IST)
சதுரகிரியில் சிவராத்திரி மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

கடந்த மாதம் மழை காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த மாதம் தற்போது சிவராத்திரி மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக நேற்று முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காலை 6 மணிக்கே மலையேற அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments