Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரியில் ஆடி அமாவாசை விழா; பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (08:49 IST)
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளதால் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி மாதம் அமாவாசையன்று நடைபெறும் விழா மிகவும் பிரசித்தமானது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆடி அமாவாசை விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா ஜூலை 28ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் சதுரகிரி மலையேற ஜூலை 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments