Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையம்: புதிய பொறுப்பாளர் நியமனம்!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (09:22 IST)
சாத்தான்குளம் வழக்கில் காவலர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் காவல் நிலையம் முழுமையாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை மதுரை கிளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வரும் நிலையில் காவலர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன் அடிப்படையில் சாத்தான்குளம் காவல்நிலையம் முழுவதுமாக வருவாய்த்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. காவல்நிலையத்திற்கு பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments