Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேட்லைட் போனுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க வாலிபர்

Webdunia
திங்கள், 2 மார்ச் 2015 (10:03 IST)
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க வாலிபரிடம் ஒருவர் சேட்லைட் போனுடன் வந்தார், அந்த சேட்லைட் போனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை விமான நிலையத்தில், மும்பை செல்லும் விமானம் நேற்று தயார் நிலையில் இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்தவர்களை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 
அப்போது, அமெரிக்க வாலிபர் டேவிட் என்பவரின் உடமைகளை சோதனையிட்டபோது, அவர் சேட்லைட் போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அவரிடம் அதுபற்றி விசாரித்தபோது, கடந்த 26 ஆம் தேதி சென்னைக்கு வந்ததாகவும், அமெரிக்காவில் அந்த சேட்லைட் போனை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். 
 
இதைத் தொடர்ந்து, அவரது சேட்லைட் போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு குற்றப்பின்னணி உள்ளதா, அவர் யார் யாருடன் பேசினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments