Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிபெருமாள் மரணம் குறித்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சசிபெருமாள் மரணம் குறித்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (17:58 IST)
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திக் கோரி அவரது மூத்த மகன் விவேக் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு, சசிபெருமாள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று விவேக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு மீது வரும் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil