Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (11:09 IST)
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்த உடனேயே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர உள்ளது போன்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சசிகலா பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல நாளில் முதல்வராக பதவியேற்கலாம் என ஜோதிடர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் யார் எப்படி மாறுவார்கள் என்பது தெரியாது. கட்சிக்குள்ளும் சிலர் ஒரு மாதிரியாக பேசுகின்றனர் என்பதால் சசிகலாவின் கணவர் நடராஜன் சசிகலாவை உடனடியாக முதல்வராக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
அதாவது வரும் 29-ஆம் தேதி பொதுக்குழு முடிந்தவுடனே சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்றுக் கொள்வார் என்று சொல்கிறார்கள். அதற்கான வேலைகளிலும் நடராஜன் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்து விடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதற்கான தொகுதிகள் கூட முடிவாகிவிட்டதாம்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments