Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

சசிகலா 29-ஆம் தேதி பொதுச்செயலாளர்; உடனேயே முதல்வராகிறார்: நடராஜன் அதிரடி வியூகம்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (11:09 IST)
வரும் டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு முடிந்த உடனேயே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா வர உள்ளது போன்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோஷமும் தற்போது அதிமுகவில் எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சசிகலா பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல நாளில் முதல்வராக பதவியேற்கலாம் என ஜோதிடர்களிடம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் யார் எப்படி மாறுவார்கள் என்பது தெரியாது. கட்சிக்குள்ளும் சிலர் ஒரு மாதிரியாக பேசுகின்றனர் என்பதால் சசிகலாவின் கணவர் நடராஜன் சசிகலாவை உடனடியாக முதல்வராக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
அதாவது வரும் 29-ஆம் தேதி பொதுக்குழு முடிந்தவுடனே சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் பதவியேற்றுக் கொள்வார் என்று சொல்கிறார்கள். அதற்கான வேலைகளிலும் நடராஜன் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயித்து விடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதற்கான தொகுதிகள் கூட முடிவாகிவிட்டதாம்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments