Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை நீக்க முடிவு?: ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடுகிறது அதிமுக முக்கிய தலைகள்!

சசிகலாவை நீக்க முடிவு?: ஆகஸ்ட் 28-ஆம் தேதி கூடுகிறது அதிமுக முக்கிய தலைகள்!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (16:45 IST)
எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்தபோது விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவோம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


 
 
இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அதிமுக கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டும் தேதி முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. அதிமுக சட்ட விதிகளின் படி பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில் உள்ளபோது பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் பரிந்துரைத்தால் பொதுக்குழுவை கூட்டலாம் என கூறப்படுகிறது.
 
அதன்படி ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதிமுகவை பொறுத்துவரை பொதுச்செயலாளருக்கே உச்ச அதிகாரம் உண்டு. எனவே அதனை வைத்து ஆட்டம் போடும் சசிகலா, தினகரன் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இந்த முடிவை எடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments