Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை..!!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (12:19 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை..!!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் இன்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சற்று முன்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலையான நிலையில் தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குப் பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து அவர் இன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதி மரியாதை செலுத்தினார். மேலும் இன்று அவர் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக ஜெயல‌லிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments