Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (08:23 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ள நிலையில் சென்னை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அதிமுக கண்டதை அடுத்து அரசியல் களத்தில் சசிகலா குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சமாதியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது
 
ஒருபக்கம் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சசிகலா தீவிர அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த வரும் சசிகலாவுக்கு காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments