மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட வாய்ப்புள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது சசிகலா விடுதலை குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை ஆகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி முதலில் முதலுதவி வழங்கப்பட்டதாகவும் அது பலன் அளிக்காததால் மருத்துவமனைக்கு சசிகலாவை கொண்டு செல்லும் பணியில் சிறைத்துறை உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்த உண்மை நிலவரம் தெரியவில்லை.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!