விழுப்புரம் அருகே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதிவியேற்றதை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதால், சசிகலா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்து குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நிதிமூழ்கியனூர் கிராமத்தில் சசிகலா ஆதரவாளர்கள் அவர் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றை வரவேற்று மகிழ்ச்சியுடன் பேனர்கள் வைத்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் சசிகலா எதிர்ப்பாளர்கள் சிலர் அவருடை புகைப்படம் உள்ள பேனர்களை கிழித்து வருகின்றனர்.
அதுபோல சிலர் அந்த பகுதியில் இருந்த பேனர்களை கிழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா ஆதரவாளர்கள் கிராமத்துக்கான குடிநீர் சேவையை நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் அப்பகுதி ஒன்றிய ஆணையரிடம் தெரிவித்தனர். பின்னர் ஆணையர் சசிகலா ஆதரவாளர்களை சந்தித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். சசிகலாவை விட அவரது ஆதரவாலர்கள் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை.
பொதுச் செயலாலர் பதிவிக்கே இந்த ஆட்டம் என்றால், சசிகலா தமிழக முதல்வரான பிறகு என்ன நடக்குமோ? என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!