Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 நாட்களில் சசிகலா கதை முடிந்துவிடும்: அதிர்சியில் மன்னார்குடி குரூப்!

இன்னும் 2 நாட்களில் சசிகலா கதை முடிந்துவிடும்: அதிர்சியில் மன்னார்குடி குரூப்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:59 IST)
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்துவிடும் என பன்னீர்செல்வம் ஆதரவு அணியில் உள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.


 
 
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அவரது அணியில் பலரும் சேர்ந்து தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய திருப்பமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து தனது ஆதரவை வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் தானாக வந்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், அதிமுக தற்போது ரௌடிகளின் அராஜகமாக மாறியுள்ளது என்றார்.
 
அப்போது மதுசூதனனை வரவேற்று பேசிய முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஓபிஎஸ் மக்கள் புரட்சியை உருவாக்கியுள்ளார். அதிமுக அவைத் தலைவர், பொருளாளர் என அதிமுக பெட்டகமே இங்கிருக்கிறது. சசிகலா ஒன்றுமில்லை என தெரிவித்தார். சசிகலா மற்றும் மன்னார்குடி கோஷ்டியின் கதை இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என்றும் பிஎச்.பாண்டியன் கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments