Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

சசிகலாவின் காலில் விழுந்த ‘முதல்வர்’ பன்னீர்செல்வம்!

Webdunia
சனி, 31 டிசம்பர் 2016 (14:53 IST)
அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் கட்சியினரிடையே உரையாற்றினார் சசிகலா.


 
 
சசிகலாவின் முதல் உரை இதுதான். இதுவரை மறைமுகமாக அரசியலில் இருந்த சசிகலா தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். ஜெயலலிதா வகித்து வந்த அதிகாரமிக்க கட்சி பதவியான பொதுச்செயலாளர் பதவியை அவரது மறைவிற்கு பின்னர் ஒரு வழியாக அடைந்துவிட்டார் சசிகலா.
 
இன்று பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றி சசிகலா தன்னுடைய உரையை முடித்துவிட்டு திரும்பும் போது அவரது காலில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் விழுந்தார்.
 
முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து மற்ற மூத்த தலைவர்களும் சசிகலாவின் காலில் விழு தயாராக இருந்தனர். ஆனால் சசிகலா பன்னீர்செல்வம் காலில் விழுந்ததும் இப்படி காலில் விழ வேண்டாம் என அதனை தடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments