Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா உறவினருக்கு அப்பல்லோவில் அனுமதி!

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா உறவினருக்கு அப்பல்லோவில் அனுமதி!

ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா உறவினருக்கு அப்பல்லோவில் அனுமதி!
, புதன், 19 அக்டோபர் 2016 (15:38 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஜெயலலிதாவின் நலனில் அக்கறையுள்ள பலர் மருத்துவமனை வந்து விசாரித்து செல்கின்றனர்.


 
 
கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா உடனிருந்து கவனித்து வருகிறார். தன்னுடைய கணவரின் சகோதரி இறந்த போது கூட செல்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் இருந்து கவனித்து வருகிறார் சசிகலா.
 
சசிகலாவின் உறவினர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலைகுறித்து விசாரித்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் சித்தப்பா மகன் ராவணன் இன்று மதியம் 2.30 மணிக்கு அப்பல்லோ வந்தார்.
 
முதல்வர் ஜெயலலிதாவின் இரத்த உறவான அவரது அண்ணன் மகன் தீபாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனுக்கு அப்பல்லோ செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்த காதலன் மூலம் குழந்தை பெற உள்ள காதலி...