Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களிடம் என்னால் பேச முடியாது: விசாரணைக்கு மறுக்கும் சசிகலா!

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (15:25 IST)
பெங்களூர் பரபப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தற்போது மவுன விரதம் இருந்து வருவதால், தன்னால் வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆஜராக முடியாது என சசிகலா பதில் அனுப்பியதாக தகவல்கள் வருகிறது.
 
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் மிகப்பெரிய வருமான வரித்துறை சோதனையை சசிகலா குடும்பத்தை குறிவைத்து 189 இடங்களில் நடத்தினர். இந்த சோதனை தொடர்ந்து ஐந்து நாட்கள் நீடித்தது.
 
அதன் பின்னர் சமீபத்தில் போயஸ் கார்டனில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் சசிகலா அறையில் இருந்து பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது. இந்த சோதனைக்கு பின்னர் சசிகலா குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
 
அதே போல பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கும் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பினர். இதற்கு சசிகலா எழுதியுள்ள பதில் கடிதத்தில், கடந்த சில நாட்களாக மவுன விரதம் இருந்து வருகிறேன். எனவே என்னால் விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாது. பிப்ரவரி 10-ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்கிறேன் என கூறியுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments