Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு பாஜகதான் கரெக்ட்! அப்போ அமமுக? சசிகலா புஷ்பா உறுதி!

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (18:24 IST)
பாஜக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே தனது லட்சியம் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிறகு அமமுக ஆதரவாளராக இருந்த ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைய பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசிய போது ”நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் தேவைகளை நிறைவேற்றவும் பாஜக அரசால் மட்டுமே முடியும். பாஜக அரசை தமிழத்தில் கொண்டு வருவதுதான் ஒரே நோக்கம்” என்று பேசியுள்ளார்.

சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தது குறித்து அமமுக மற்றும்  அதிமுக தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பாஜகவை தமிழகத்தில் நிலைநிறுத்துவதாக சசிகலா புஷ்பா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments