Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துக்கு பாஜகதான் கரெக்ட்! அப்போ அமமுக? சசிகலா புஷ்பா உறுதி!

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (18:24 IST)
பாஜக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே தனது லட்சியம் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிறகு அமமுக ஆதரவாளராக இருந்த ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைய பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசிய போது ”நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் தேவைகளை நிறைவேற்றவும் பாஜக அரசால் மட்டுமே முடியும். பாஜக அரசை தமிழத்தில் கொண்டு வருவதுதான் ஒரே நோக்கம்” என்று பேசியுள்ளார்.

சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தது குறித்து அமமுக மற்றும்  அதிமுக தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பாஜகவை தமிழகத்தில் நிலைநிறுத்துவதாக சசிகலா புஷ்பா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments