Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தையே புரட்டிப்போடுவேன்: சசிகலா புஷ்பாவின் அதிரடி பேச்சு!

தமிழகத்தையே புரட்டிப்போடுவேன்: சசிகலா புஷ்பாவின் அதிரடி பேச்சு!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:16 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தான் தமிழகத்தையே புரட்டிப்போடும் சக்தியை கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.


 
 
திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் கன்னத்தில் அடித்து, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, தனக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், தான் பதவி விலக வேண்டும் என கட்சி தலைமை வற்புறுத்துவதாகவும், அடித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் அவர் டெல்லி போலீசில் இதுகுறித்து புகாரும் அளித்தார். இதனையடுத்து சசிகலா புஷ்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து தூத்துக்குடியில் இரண்டு இளம்பெண்கள் புகார் அளித்தனர். சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் தமிழகம் வந்தால் கைது செய்யப்படும் சூழலும் நிலவுகிறது.
 
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா தன்மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், தனக்கெதிராக அநீதிகள் தொடர்ந்தால் தன்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை வேறுமாதிரியாக இருக்கும் எனவும், ஒட்டுமொத்த தமிழக அரசியலையே புரட்டிப்போடும் சக்தி தனக்குள்ளது எனவும் கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments