Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாதானத்திற்கு சென்ற சசிகலா தரப்பு - சிங்க முகம் காட்டிய சசிகலா புஷ்பா

சமாதானத்திற்கு சென்ற சசிகலா தரப்பு - சிங்க முகம் காட்டிய சசிகலா புஷ்பா
Webdunia
புதன், 29 மார்ச் 2017 (13:02 IST)
சசிகலா மீது ஏராளமான புகார்களை அடுக்கடுக்காக கூறி வந்த சசிகலா புஷ்பாவிடம் சமாதானம் பேசப் போய் சிலர் மிரண்டு திரும்பியிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு முன்பும் சரி, பின்பும் சரி, சசிகலா மீது ஏராளமான புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா.  அதிமுக சட்ட விதிகளின் படி, சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அதேபோல், ஜெ.வின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் புகார் மனு கொடுத்தார். 
 
அதன்பின், சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் அணி களம் இறங்கிய பின், ஜெ.வின் மர்ம மரணம் குறித்த சந்தேகத்தை அவர்கள் கையில் எடுத்தார்கள். எனவே, சமீப காலமாக சசிகலா புஷ்பா அமைதி காட்டி வந்தார்.
 
இந்நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் சசிகலா தரப்பிலிருந்து சிலர் இறங்கினார். ஆனால், சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெ.வின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகி, அதில் சசிகலா தரப்பிற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தால், நானே சசிகலாவை ஆதரிப்பேன். அதுவரை அவரை எதிர்த்து நான் நிற்பேன்” என காட்டமாக பேசி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம் சசிகலா புஷ்பா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments