Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவின் கணவர் முன்ஜாமீன் கேட்டு மனு: கொலை மிரட்டல் வருவதாக புகார்

சசிகலா புஷ்பாவின் கணவர் முன்ஜாமீன் கேட்டு மனு: கொலை மிரட்டல் வருவதாக புகார்

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (16:22 IST)
மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா முதலமைச்சர் ஜெயலலிதா மீது வைத்த பகீர் குற்றச்சாட்டுகள் நாட்டையே உலுக்கியது தேசிய ஊடகங்களின் பார்வை சசிகாலா புஷ்பாவின் மீது விழுந்தது.


 
 
தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாகவும், ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும் கூறினார் சசிகலா புஷ்பா. மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறிய அவர், தனக்கோ, தனது கணவருக்கோ, மகனுக்கோ ஏதாவது நேர்ந்தால் அதற்கு அதிமுக தான் பொறுப்பு எனவும் பேட்டியளித்தார்.
 
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன் மற்றும் அவரது மகன் பிரதீப் ராஜா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அது தொடர்பாக முன்ஜாமீன் கேட்டும் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவரின் அந்த மனு வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments