Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவிற்கு எதிராக அணிதிரட்டும் சசிகலா புஷ்பா

ஜெயலலிதாவிற்கு எதிராக அணிதிரட்டும் சசிகலா புஷ்பா

ஜெயலலிதாவிற்கு எதிராக அணிதிரட்டும் சசிகலா புஷ்பா
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (16:34 IST)
சசிகால் புஷ்பா, அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து வெளிவர அதிமுக கட்சிக்கு எதிராக மற்ற கட்சிகளை அணிதிரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


 

 
டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்டு 22ஆம் தேதி சசிகலா புஷ்பா மீதுள்ள வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதிமுக கட்சிக்கு எதிராக மற்ற கட்சிகளை அணிதிரட்டும் பணியில் சசிகலா புஷ்பா ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலில், சசிகலா புஷ்பா கட்சி பெயரை பயன்படுத்திய காரணத்தின் அடிப்படையில் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று அதிரடியை தொடங்கிய சசிகலா புஷ்பா ஜெயலலிதா தன்னை அடித்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
அவரின் இத்தகைய செயலை அடுத்து அதிமுக கட்சியினர், அவர் மீது தொடர்ந்து குற்றங்களை அடுக்கி வைத்தனர். அவர் குடும்பம் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவர் மீது பல புகார்கள் அளிக்கப்பட்டது.
 
அதன் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்டு 22ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அதில் இருந்து வெளிவர சசிகலா மற்ற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
 
அனைத்து கட்சி தலைமையிடமும், என் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் போலியானவை என்று உங்களுக்கு நன்றாக தெரியும். என் மீது போடப்பட்ட வழக்குகள் உண்மையா என்று ஆராயும்படி, அறிக்கை வெளியிடுங்கள், என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அதனால் அனைவரும் சசிகலா புஷ்பா நிலை முடிவாகும் நாள் ஆகஸ்டு 22ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்தக் கட்சியை எதிர்க்கும் தமிழிசை? - ஜல்லிக்கட்டுக்கு உறுதி