Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா - வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (12:51 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வைத்து, அதிமுகவினர் ஒரு புகைப்பட படப்பிடிப்பு ஒன்றை சமீபத்தில் செய்துள்ளார்கள். அதில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


 

 
33 வருடங்களாக திரைமறைவு அரசியல் நடத்தி வந்த சசிகலா, ஜெ.வின் மறைவிற்கு பின், அரசியலில் அடி எடுத்து வைத்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், எப்படியாவது அவரை முதலமைச்சர் பதவியில் அமர வைக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் இந்தியா டுடே பத்திரிக்கை சென்னை, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் நடத்திய கான்க்ளேவ் விவாத கருத்தரங்க மாநாட்டை சசிகலா கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அதன்பின் இந்தியா டுடே நிருபர் கேட்ட சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். 
 
இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று, அதே ஹோட்டலில் சசிகலாவை வைத்து ஒரு புகைப்பட படப்பிடிப்பு நடந்தது என்பது.
 
அதில் சசிகலா பல்வேறு கோணத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளாராம். அந்த புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் தயாரிக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் கட்-அவுட், பேனர்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. 

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments