Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்களின் ஆசைகள் நிறைவேறும்! – பொதுச்செயலாளர் சசிக்கலா அறிக்கை?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (11:42 IST)
அதிமுகவில் சசிக்கலா மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “கழக தொண்டர்களான உங்கள் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சேர்ந்து நமது இயக்கத்தை காத்திட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் எனது வாழ்வை அரசியலுக்கு அர்ப்பணித்துள்ளேன். கழக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்சி தலைவர், புரட்சி தலைவி காட்டிய வழியில் கழகத்தை காப்போம். கவலை வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments