கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோலில் இன்று வர வாய்ப்பு!

கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோலில் இன்று வர வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (09:18 IST)
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக குளோபல் சிட்டி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


 
 
அந்த அறிக்கையில் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே உள்ளதாகவும், கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
கல்லீரல் இன்டன்சிவ் கேர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு கிட்னி பாதிப்பு, நுரையீரல் பாதிப்பும் ஆகியவை உள்ளதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தற்போது அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் சசிகலாவை பரோலில் வெளியே எடுக்க அவரது குடும்பம் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் தனது கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது தசரா விடுமுறை முடிந்துள்ளதால் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

பாமக தலைவராக அன்புமணி தொடர முடியாது.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments