Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை கொலை செய்தது சசிகலா ; ஓ.பி.எஸ் உடந்தை - வெடிக்கும் மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (16:38 IST)
தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலாதான் கொலை செய்தார் எனவும், அதற்கு ஓ.பன்னீர் செல்வம் உடந்தையாக இருந்தார் எனவும் எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திமுக சார்பில் பேச்சாளர்கள் கூட்டம் சமீபத்தில் சென்னை தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 500 பேர் கலந்து கொண்டனர். 
 
அப்போது, திமுக பேச்சாளர்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கியிருப்பதாக பலர் மு.க.ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்.
 
அதன்பின் பேசிய மு.க.ஸ்டாலின் “ திமுக பேச்சாளர்களின் கோரிக்கைகளை கழகம் பரிசீலிக்கும், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி. அவரது மரணம் மர்மாக இருக்கிறது. அவரை கொலை செய்தது சசிகலதான் என ஆணித்தரமாக நீங்கள் அனைவரும் பேச வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்தது ஓ.பன்னீர் செல்வம்தான் என்பதை மக்கள் மனதில் பதிய வையுங்கள். எனெனில், மருத்துவமனையில் ஜெ. இருந்த போது, அங்கு ஓ.பி.எஸ் அமைதியாகவே இருந்தார். எனவே இதுபற்றி எல்லா மேடைகளிலும் பேசுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும்” என பேசினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments