Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழக பொதுச்செயலாளர் சசிக்கலா? எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கல்வெட்டு!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (11:20 IST)
அதிமுக பொன்விழாவான இன்று எம்.ஜிஆர் நினைவில்லத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் கழக பொதுசெயலாளர் சசிக்கலா என பொறிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1972ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அக்டோபர் 17ம் நாளில் அதிமுக கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் கட்சி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுகவினர் பலரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் சசிக்கலா மரியாதை செலுத்தியதுடன் கல்வெட்டு ஒன்றையும் திறந்துவைத்தார். அதில் பொன்விழா ஆண்டு துவக்க நாள் கொடியை ஏற்றியவர் திருமதி வி.கே.சசிக்கலா, கழக பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments