Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் அணி கறார்: சசி குடும்பம் பிளீஸ் கோ அவுட்!

ஓபிஎஸ் அணி கறார்: சசி குடும்பம் பிளீஸ் கோ அவுட்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (13:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் சசிகலா. அதன் பின்னர் முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அந்த பதவியை அடைய முயற்சி செய்தார் சசிகலா.


 
 
இதனையடுத்து ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்து அதிமுகவில் ஓபிஎஸ் அணியை உருவாக்கினார். பின்னர் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக தொண்டர்கள் ஆதரவு பெருகியது. ஆனால் பெரும்பான்மையானா எம்எல்ஏக்கள் ஆதரவு சசிகலா தரப்பிடம் இருந்ததால் சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார்.
 
இருந்தாலும் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சென்றார் சசிகலா. அதன் தினகரன் கட்டுப்பாட்டில் அதிமுக சிக்கித்தவித்தது. தொடர்ந்து சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் அதிமுகவில் அதிகமாகவே இருந்தது.
 
ஓபிஎஸ் அணியும் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினர் முற்றிலுமாக விலக வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என ஓபிஎஸ் கூறியதாக செய்திகள் வெளிவந்தது.
 
இதனை அதிமுகவின் சசிகலா அணியில் உள்ளவர்கள் வரவேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என ஓபிஎஸ் கூறியதால் சசிகலா குடும்பம் தொடர்ந்து அதிமுகவில் நீடிக்குமா என கேள்வி எழுந்தது.
 
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் யாரும் அதிமுகவில் இருக்க கூடாது. முற்றிலுமாக அந்த குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக விடுபட வேண்டும் இது தான் எங்கள் முதல் கோரிக்கை. இதில் இருந்து எப்பொழுதும் பின்வாங்க மாட்டோம் என கறாராக கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments