Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கல. நான் போக மாட்டேன் - சசிகலா அடம்?

தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கல. நான் போக மாட்டேன் - சசிகலா அடம்?
, செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (17:51 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் நகல் இன்னும் சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது..


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது...  
 
இந்நிலையில், சசிகலா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அவசரமாக சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் “தீர்ப்பை ஏற்றுக்  கொள்கிறேன். நான் தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருப்பதால் சில கட்சிப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கிறது. மேலும், எனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், சில மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மாலைக்குள்ளே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலை தற்போது வரை சசிகலா தரப்பினர் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தீர்ப்பின் நகல் கையில் கிடைக்கட்டும் அதன் பின் பார்க்கலாம். அதுவரை பெங்களூருக்கு செல்ல முடியாது என சசிகலா தரப்பு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவின் சீராய்வு மனுவும் சாதகமாகாது: அட்டர்னி ஜெனரல்