Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதறி அழுத படி சம்மதம் தெரிவித்த சசிகலா...

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (12:31 IST)
மிகுந்த எதிர்பார்புகளுக்குடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர்.


 

 

 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா கலந்து கொள்ளவில்லை எனவே, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர் தற்போது போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அவரை நேரில் சந்தித்து, பொதுக்குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு சசிகலாவை வலியுறுத்தினர்.
 
தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அதை வாங்கிய சசிகலா, அங்கிருந்த ஜெ.வின் உருவப்படத்திற்கு கீழே வைத்து கண்ணீருடன் வணங்கினார். அப்போது அவர் தேம்பி தேம்பி அழுதார். சிறுது நேரம் மவுனமாக ஜெ.வின் படம் அருகிலேயே நின்று கொண்டிருந்தார்.
 

 
அதன்பின், கழகத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக சசிகலா சம்மதமும் தெரிவித்ததாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மக்களிடையே பிரச்சினையில்லை! மதவாதிகள்தான் பிரச்சினை! - மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

டிரம்புக்கு நல்ல புத்தி தரணும்.. ஹனுமன் கோவிலில் வேண்டுதல் செய்யும் குஜராத் மக்கள்..!

இன்று முதல் வெயில் அதிகரிக்கும்.. 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

ஞானசேகரனுக்கு இன்று இன்று குரல் பரிசோதனை! ரத்த பரிசோதனை எப்போது?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. டெல்லியில் ஆட்சியை பிடிக்கிறதா பாஜக?

அடுத்த கட்டுரையில்
Show comments