ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

Mahendran
திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (16:47 IST)
அதிமுக கட்சி தற்போது பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும், அதனை களையவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தது உண்மைதான் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
 
"அதிமுக இப்போதும் பலவீனமாகவே உள்ளது. அதை சரிசெய்வதுதான் என்னுடைய பணி. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஏற்படும். அதிமுகவில் நிலவும் சிக்கல்களை புதிதாக வந்தவர்களால் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே அதை சாதிக்க முடியும். அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். சிலர் அரசியலுக்கு வந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதில் இருப்பவர்களுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்," என்று சசிகலா கூறினார்.
 
மேலும்,  "தி.மு.க. அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறது. இது மக்களுக்கும் இப்போது புரிந்துவிட்டது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க.வின் கனவு நிறைவேறாது," என்று அவர் தெரிவித்தார்.
 
சசிகலாவின் இந்த கருத்துக்கள், அதிமுகவில் பிளவுபட்டுள்ள தலைவர்களுக்கு இடையே மீண்டும் ஒரு இணக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments