Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி ஏன் வரவில்லை? - தினகரனிடம் எகிறிய சசிகலா...

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (11:00 IST)
தன்னை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இன்னும் வரவில்லை என சசிகலா கோபமாக கேள்வி எழுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அவரின் உறவினர் டி.டிவி.தினகரன் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் சில அமைச்சர்களும் உடன் சென்றனர். ஆனால், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவை சந்திக்க சிறைத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.
 
அதேபோல், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்னும் பெங்களூர் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசவில்லை. குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் இருப்பவரை ஒரு முதல்வர் சென்று சந்திப்பது சர்ச்சையை உருவாக்கும் என்பதால் அவர் செல்லவில்லை எனத்தெரிகிறது. 
 
இந்நிலையில், தினகரனிடம் பேசிய சசிகலா, ஏன் முதல்வர் வரமாட்டாரா? என கோபமாக கேட்டுள்ளார் எனவும், எடப்பாடி ஏன் வரவில்லை என தினகரன் அவரிடம் விளக்கி சொன்னதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments