Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணா ஸ்டோரில் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (13:27 IST)
சென்னை சரவணா ஸ்டோரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சென்னை தி.நகரில் அமைந்துள்ளது சரவணா ஸ்டோர். இந்த நிறுவனத்தில் வெளியூரிலிருந்து ஆண், பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் திடீரென மரணம் அடைவது வாடிக்கையாகவே நடந்துவருகிறது. சமீபத்தில் அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஜோசப் என்ற இளைஞர் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருநெல்வேலியை அடுத்துள்ள அம்பாசமுத்திரத்தை சேர்ந்த அவர் சரவணா ஸ்டோர் ஊழியர்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இது குறித்து மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments