Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னா என்ன வேணாலும் செய்வாங்களா? – ரம்மியால் சரத் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (12:34 IST)
பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருபவர் சரத்குமார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன்  ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னையில் போராட்டம் நடத்தியது. இதில் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் ரம்மியை மக்கள் விளையாடுவதாக பலர் சொல்கிறார்கள். நான் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட மக்களிடம் கேட்டேன். ஆனால் யாரும் ஓட்டு போடவில்லை. பின்னர் சரத்குமார் சொன்னால் ரம்மி மட்டும் எப்படி விளையாடுவார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments