Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத துவேஷம் வேண்டாம்: டெல்லி மாநாடு குறித்து சரத்குமார் கருத்து

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (19:01 IST)
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களால்தான் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதனை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அவர்கள் இதனை மத தோஷத்துடன் அணுக வேண்டாம் என்றும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கொரோனாவிற்கு எதிராக போரிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
இதுகுறித்து சரத்குமார் மேலும் கூறியதாவது:டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மத துவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம். சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments