Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதையும் தனி மாவட்டம் ஆக்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (22:06 IST)
சமீபத்தில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 'கள்ளக்குறிச்சி' என்ற தனி மாவட்ட அறிவிப்பை அறிவித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மேலும் சில புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்றும், கோவை, திருப்பூர் மாவட்டத்தின் ஒருசில நகரங்களை கொண்டு 'பொள்ளாச்சி' என்ற புதிய மாவட்டம் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி  மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தென்காசி தற்போது நெல்லை மாவட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  வரும் தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக வேலைசெய்வோம் என்றும், தேர்தல் வர உள்ள நிலையில் மக்களை ஈர்க்க தி.மு.க. ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்துவதாகவும், இதனை முன்பே நடத்தியிருக்கலாம் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திரா அதிரடி கைது.. கோவையில் பரபரப்பு..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

17 ஆயிரம் மதிப்புள்ள Perplexity AI Tool இலவசம்! ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

அடுத்த கட்டுரையில்
Show comments