காலில் விழுந்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன்: வாக்காளர்களிடம் சரத்குமார் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (09:20 IST)
காலில் விழுந்து கெஞ்சி கேட்டுக் கொள்வதாக வாக்காளர்களிடம் சரத்குமார் உருக்கமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் அவர்களும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் 
 
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது ’தயவுசெய்து ஓட்டுக்கு பணம் யாரும் வாங்க வேண்டாம் என்று காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்
 
பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்து ஒரு சில கட்சிகள் தேர்தலை சந்திப்பதாகவும், மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று கெஞ்சி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சாதி மத பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதே தனது கட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments