Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம்: சரத்குமார்

நடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம்: சரத்குமார்
, திங்கள், 23 நவம்பர் 2015 (12:07 IST)
சமக கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியபோது,


 

தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பிரதமர் கவனிக்காதது வருந்தத்த நிகழ்வுதான். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்டு உள்ளனர். சென்னையில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் மழைச்சேதம் ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக அளவில் வெள்ள நிவாரணம் வழங்கவேண்டும்.

முதலமைச்சர் மீண்டும் வாய்ப்பு தந்தால் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன். நடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம். புதிய நிர்வாகிகள் ஆலோசனை கேட்டால் சொல்வோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil