Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் சயன், மனோஜ் ஆஜர்! போலீசாரிடம் மாஜிஸ்திரேட் சரிதா சரமாரி கேள்வி

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2019 (11:43 IST)
கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டி  அண்மையில் வீடியோ  வெளியிட்டார். 

கூலிப்படைத் தலைவன் சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் எடுத்த பேட்டிகளையும் அந்த வீடியோவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் குற்றச்சாட்டுகளைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததோடு, அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சயன், வாளையார் மனோஜ் ஆகியோரை டெல்லியில் தமிழக போலீஸார் கைது செய்தனர் .
 
இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில், சயன் மற்றும் மனோஜை  போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம்  மாஜிஸ்திரேட் சரிதா சரமாரி கேள்வி எழுப்பினார். 
 
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள பிரிவுகளின்படி, அவர்களது பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது, அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது .  
 
புகார்தாரரான எடப்பாடி பழனிச்சாமியிடம் இது குறித்து விசாரித்து விளக்கம் பெற்றீர்களா ?  என சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் உங்கள் தரப்பு வழக்கறிஞர் யார் என மாஜிஸ்திரேட்டின் கேட்டதற்கு, டெல்லியில் இருந்து வழக்கறிஞர்கள் வருவார்கள் என சயனும் மனோஜும் பதில் அளித்தனர். இதையடுத்து கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சயான்,மனோஜை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என நீதிபதி மறுத்துவிட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments