Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருது தொகையை மீண்டும் அரசுக்கே கொடுத்த சங்கரய்யா!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (14:33 IST)
தமிழக தகைசால் விருது மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விருது தொகையை தமிழக அரசுக்கே வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக தகைசால் தமிழர் என்ற புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விருது முதலாவதாக பொதுவுடமை இயக்க தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான என்.சங்கரய்யா, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவரும் ஆவார்.

தமிழக அரசு தகைசால் விருதும், ரூ.10 லட்சம் விருது தொகையும் தருவதாக அறிவித்த நிலையில் அந்த விருது தொகையை மீண்டும் தமிழக அரசுக்கே வழங்குவதாக என்.சங்கரய்யா அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments