Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணோடு காதல்… கண்டித்த சகோதரரைக் கொலை – இளைஞரின் கொடூர செயல்!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (16:59 IST)
சேலம் அருகே தன் சகோதரியைக் காதலித்த இளைஞரோடு ஏற்பட்ட மோதல் காரணமாக அருள்குமார் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் செலவடை அருகே மாரிவளவை சேர்ந்தவர் அருள்குமார். இவரது சித்தப்பா மகள் பாஸ்கர் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண் 18 வயது நிரம்பாத மைனர் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அருள்குமாருக்கும் பாஸ்கருக்கும் இடையே விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்ற அந்த பெண் பெற்றோர் போலிஸில் புகார் அளித்ததும் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இதெற்கெல்லாம் காரணம் அருள்குமார்தான் என நினைத்த பாஸ்கர் தனது நண்பருடன் சென்று அவரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருள்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்கள் ஹேம்நாத் ஆகிய இருவரும் போலீஸில் சரணடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments