Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிச்சை எடுத்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பல்

பிச்சை எடுத்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பல்
, புதன், 26 நவம்பர் 2014 (10:30 IST)
சேலம்  கோரிமேடு பகுதியில் பிச்சை எடுத்து வந்த பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்துள்ளது.
 
கேரள மாநிலம், குருவாயூரைச் சேர்ந்தவர் 53 வயதுடைய தேவதாஸ். இவர் சேலம் கோரிமேட்டில் வசித்து வருகிறார். கோரிமேடு பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், இவரது ஹோட்டல் திறந்து கிடந்தது. அங்கு வேலை பார்த்து வந்த ரவிச்சந்திரனைக் காணவில்லை. உள்ளே  உடைகள் களைந்த நிலையில் 45 வயதுடையப் பெண், முகம், உடலில் பாட்டில் குத்துக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.
 
அருகில் உடைந்த நிலையில் மது பாட்டில்கள் கிடந்தன. இது குறித்து காவல் துறையில் புகார் கெசய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கன்னங்குறிச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில் அந்தப் பெண்ணை இரண்டுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பலாத்காரம் செய்து, பின்னர் தலையில் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துள்ளனர் என்றும், அந்தப் பெண், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.
 
அந்தப் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தது ஹோட்டலில் பணிபுரிந்த புரோட்டா மாஸ்டர் ரவிச்சந்திரனாக இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
 
சில நாட்களுக்கு முன்னர் கடை உரிமையாளர் தேவதாஸ், குருவாயூர் சென்றதால் கடந்த 23ஆம் தேதி முதல் 2 நாட்களுக்குக் கடை விடுமுறை விடப் பட்டிருந்தது.
 
பின்னர் தேவதாஸ், திரும்பி வந்ததும் மறுநாள் கடையைத் திறக்கலாம் எனக் கூறியுள்ளார். அதற்கு ரவிச்சந்திரன், கடையை சுத்தப்படுத்திவிட்டு, இரவில் இங்கேயே தங்கி விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், கொலைக்குப் பின்னர் ரவிச்சந்திரன் மாயமானார். அவர் பிடிபட்டால் கொலையாளிகள் குறித்த விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 
கடந்த 3 மாதத்திற்கு முன்னர் அதே ஹோட்டலில் வேலை பார்த்து வரும் மணி, லோகு ஆகியோர் ரவிச்சந்திரனை வேலைக்கு சேர்த்துவிட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil